சுயாட்சி இல்லாவிட்டால் தனிநாடு: அண்டன் பாலசிங்கம்
கொழும்பு:
தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வேண்டும் என்ற எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தனிநாடு அமைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம்கூறியுள்ளார்.
புலிகள் ஆதரவு இணையதளத்தில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் கூட்டாட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்க புலிகள் ஒப்புக்கொண்டதால் தமிழர்களின் சுய நிர்ணயஉரிமையைக் கைவிட்டுவிட்டோம் என்று கருதக்கூடாது.
ஆஸ்லோவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது கூட்டாட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்கஒப்புக்கொண்டோம். அது பேச்சுவார்த்தை பற்றிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. மற்றபடி ஆஸ்லோபிரகடனம் என்று எதுவும் இல்லை.
தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, பிரிவினை ஆகியவற்றைக் கோரும் உரிமையை நிபந்தனையின்றிகைவிட்டுவிட்டதாக யாரும் கருதிக்கொள்ளக்கூடாது. சுயாட்சி கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தனிநாடுஅமைப்பதைத் தவிர வேறவழியல்லை என்று பாலசிங்கம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications