2 வயது மகளை தூக்கிலிட்ட தந்தை கைது
வத்தலகுண்டு:
வத்தலகுண்டு அருகே இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, முதல்குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
வத்தலகுண்டு அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (26). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரதுமனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு முத்துலட்சுமி (2) என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில் சமீபத்தில் காளீஸ்வரிக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும்என்று எதிர்பார்த்திருந்த சீனிவாசன் இதனால் ஆத்திரமடைந்தார். கோபத்தில் மூத்த மகள் முத்துலட்சுமியைஉயிருடன் தூக்கில் தொங்கவிட்டார்.
தூக்கில் தொங்கிய அந்தப் பிஞ்சுக் குழந்தை, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது. இதையடுத்து வீட்டைப்பூட்டிவிட்டு சீனிவாசன் வெளியே ஓடிவிட்டார்.
அருகில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரியவர அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்துபட்டிவீரன்பட்டி போலீஸார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சீனிவாசனை கைது செய்தனர்.
பெற்ற மகளை தந்தையே தூக்கிலிட்டு கொன்றது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications