தமிழக ஆளுநராக பர்னாலா நியமனம்
டெல்லி:
தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவர் ஆந்திர மாநில ஆளுநராக இருந்தார். ஆந்திராவின் புதிய ஆளுநராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர்சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இத் தகவலை ஜனாதிபதி மாளிகை செயதிக் குறிப்பு தெரிவிக்கிறது.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவிக்கு இழுபறி ஏற்பட்டதையடுத்து போட்டியில் இருந்துஷிண்டே விலகினார். அவருக்குப் பதிலாக விலாஸ்ராவ் தேஷ்முக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வராக்கியுள்ளார்.
முதல்வர் பதவியை விட்டுத் தந்த ஷிண்டே, சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து முதல்வர்பதவியை விட்டு விலகியவுடன் அவருக்கு ஆளுநர் பதவி தரப்பட்டுள்ளது.
பர்னாலா, தனது பதவிக் காலம் முடியும் வரை தமிழக ஆளுநராக நீடிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.பர்னாலா, திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications