நான் ஏன் பதவி விலக வேண்டும்: ஜெ கேள்வி
சென்னை:
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தமிழகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குரியாக்கிய கருணாநிதிக்கு,என்னை பதவி விலகச் சொல்ல எந்த அருகதையும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நான் பேசிய உரையாடலை வெளியிட்டதன் மூலம் நான் ரகசிய காப்பு பிரமாணத்தைமீறிவிட்டதாகவும், இதனால் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
ஆளுநர் மாற்றம் தொடர்பான பிரச்சனை கடந்த சில மாதங்களாகவே பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இதில்ரகசியம் ஏதும் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எதையும் மறைக்க விரும்பாமல் தான் நடந்ததைத் சொன்னோம்.
தலைமைச் செயலாளர் மூலம் தான் மாநில அரசின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் விளக்க முடியும். அதைத் தான் லட்சுமி பிரனேஷ்செய்தார். சிவராஜ் பாட்டீலுடன் நான் பேசியதை பத்திரிக்கைகளுக்கு வெளியிடவில்லை. நீதிமன்றத்திடம் தான் தெரிவித்தோம். இதனால்,இந்த விஷயத்தில் யாரும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிடவில்லை.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குரியாக்கிய ஒரு நபர் (கருணாநிதி) என்னைரகசிய மீறல் காரணம் சொல்லி பதவி விலகக் கோருவது மட்டமான செயல்.
பச்சோந்தியான கருணாநிதி இப்போது என்னவோ சாமியார் மாதிரி வேஷம் போட முயல்வது வேடிக்கையானது.
எனது ஆட்சியைக் கலைக்க வேண்டும், ஏதாவது கோல்மால் செய்து அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பது தான் கருணாநிதியின் ஒரேகுறிக்கோள்.
கருணாநிதியும் அவரது புதிய கூட்டாளி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் சேர்ந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய ஒருவரை (பர்னாலா)ஆளுநராக்க சதி செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை நிலைகுலையச் செய்ய வைப்பதே இந்தக்கும்பலின் நோக்கம்.
மிகச் சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வரும் எனது அரசுக்குத் தொல்லை தருவதற்காக தனக்கு வேண்டிய ஒருவரை கவர்னராக்ககருணாநிதி பல காலமாக முயன்று வந்தார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications