வீரப்பன் கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை
ஈரோடு:
வீரப்பனின் கூட்டாளியான துப்பாக்கிச் சித்தனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு பர்கூர் வனப்பகுதியில் உள்ள கருப்பட்டி கிராமம் அருகே வீரப்பன் கும்பலுக்கும், அதிரடிப்படை வீரர்களுக்கும்இடையே நடந்த மோதலில் வீரப்பன் கும்பலைச் சேர்ந்த 2 பேரை அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த மோதல் தொடர்பாக வீரப்பன் உள்ளிட்டவர்கள் மீது அந்தியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்சம்பந்தப்பட்ட வீரப்பனின் கூட்டாளியான சித்தன் எனப்படும் துப்பாக்கிச் சித்தன் கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய டிஜிபி காளிமுத்துமுன்பு சரணடைந்தார்.
சித்தன் கைது செய்யப்பட்டு அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் பவானி விரைவு நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில், துப்பாக்கிச்சித்தனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி பாண்டுரங்கன் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications