வீராணம் ஏரி நிரம்பியது; உபரி நீரால் வயல்கள் மூழ்கின
கடலூர்:
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரி உடைந்து விடாமல் தடுப்பதற்காகதிறந்துவிடப்பட்ட உபரி நீரால் சில கிராமங்களில் வயல்கள் மூழ்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வீராணம். இங்குள்ள ஏரியிலிருந்துதான் தற்போது சென்னைக்குகுழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்து வந்த வீராணம் ஏரி தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. வீராணம்ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். இதில் தற்போது 46.9 அடி நீர் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.இதனால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஏரியிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொடர்ந்துபெய்து வரும் மழை காரணமாக வயல்கள் மூழ்கி, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் கூடுதலாகவீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வயல்கள் மேலும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.
திருநாரையூர், புளியங்குடி, எடையார், வவ்வால்தோப்பு, நெடும்பூர், மேலவன்னியூர் உள்பட பல கிராமங்களில்வயல்கள் மூழ்கியுள்ளன. கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கன மழையால் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வேகமாகநிரம்பி வருகின்றன. பல மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பை கருதி திறந்து விடப்பட்டுவருகின்றன.
சென்னை நகரிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நகரில் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications