பாட்டீல் பேச்சை டேப் செய்யவில்லை: ஜெ.
சிவகாசி:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஆளுநர் மாற்றம் தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பேசியதை நான் டேப்பில் பதிவுசெய்யவில்லை. எனவே ரகசியக் காப்பு பிரமாணத்தை நான் மீறியதாகக் கூற முடியாது.
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதோ, பதிவு செய்வதோ எனது வாடிக்கையல்ல. பாட்டீலுடன் நான் பேசிய விவரங்களில்,எனக்கு நினைவில் இருந்ததை நான் கூற அதை அபிடவிட் மனுவாக தலைமைச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.
பாட்டீலும், நானும் மேலும் பல விஷயங்கள் குறித்தும் பேசினோம். அவற்றையெல்லாம் எனது மனுவில் குறிப்பிடவில்லை. எனவே இதைநம்பிக்கைத் துரோகம் என்றும் கூற முடியாது, ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி விட்டதாகவும் கூற முடியாது.
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை தேவையில்லாமல் திசை திருப்பப் பார்க்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்கள் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாதிகளை தமிழ்நாட்டுக்குள் ஊடுறுவ விட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைஏற்படுத்தியதுபோல நான் நாட்டுக்குத் துரோகம் எதையும் செய்து விடவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.