கணவன் கள்ளக்காதல்: "துண்டித்தார்" மனைவி!
திருத்தணி:
கள்ளக் காதலில் ஈடுபட்ட கணவன் ஆணுறுப்பை துண்டித்தார் மனைவி.
திருத்தணியில் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் சேத். இவரது மனைவி மாலதி.சேத்துக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சேத்துடன் அடிக்கடி மாலதிவாக்குவாதம்செய்வது வழக்காம்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை குடித்து விட்டு சேத் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கள்ளக் காதலைவிட்டுவிடுமாறு அவரிடம் கூறியுள்ளார் மாலதி. ஆனால் சேத் முடியாது என்று கூறவே இருவருக்கும் வாக்குவாதம்முற்றியது.
ஆத்திரமடைந்த மாலதி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சேத்தின் விதைப்பையை வெட்டினார். கடுமையானரத்தப் போக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் மிதந்த சேத் உயிருக்காக போராடினார்.
அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், சேத்தையும், துண்டிக்கப்பட்ட விதைப்பையையும் எடுத்துக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.