இலங்கை அரசியல் சட்டத்தை திருத்த சந்திரிகா சதி?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் அரசியல் சட்டத்தையே மாற்ற அதிபர் சந்திரிகா சதி செய்வதாக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்தலைவர் ரெளப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
சட்ட விரோதமாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் அரசியல் சட்டத்தையே தனக்கு சாதகமாக திருத்தசந்திரிகா முயல்கிறார். அவரது இந்த மோசடி வேலையை தடுத்து நிறுத்துவோம். இதற்காக எங்களது கட்சியைச்சேர்ந்த மூன்று எம்.பிக்களை சந்திரிகா விலைக்கு வாங்கியுள்ளார்.
தனது பதவியை காத்துக் கொள்ள சதி வேலையில் ஈடுபட்டுள்ள சந்திரிகா முதலில் பதவி விலக வேண்டும்.இனியும் பதவியில் நீடிக்க அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
சந்திரிகாவின் செயலால் சிறுபான்மையினர் மட்டுமல்ல தேசமே பாதிப்புக்கு உள்ளாகப் போகிறது என்றார்.












Click it and Unblock the Notifications