பரிசுப் பையை தவற விட்ட அதிரடிப்படை வீரர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வீரப்பனை வீழ்த்தியதற்காக சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்துவாங்கிய ரொக்கப் பரிசு, வீட்டு மனைப் பட்டா, பதவி உயர்வு உத்தரவு ஆகியவை அடங்கிய பையை தவறவிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்.

மதுரை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ், சிறப்பு அதிரடிப்படையில் உள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பரிசுகளையும், பதக்கத்தையும் பெற்ற அருள் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன்போலீஸ் வாகனத்தில் மதுரை வந்து சேர்ந்தார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இறங்கிய அருள்பிரகாஷ் தனது குடும்பத்தினரை பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

தனது நண்பர்களைப்பார்த்து விட்டு வருமாறு கூறிச் சென்றார்.

பரிசுகள், பதக்கம் அடங்கிய தோல் பையுடன் அருள் பிரகாஷின் பெற்றோர் கொண்டு பஸ்சில் ஏறினர். பஸ்சில்கூட்டம் அதிகமாக இருக்கவே, அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண் தோல் பையை வைத்திருப்பதாகக் கூறிவாங்கியுள்ளார்.

அய்யர் பங்களா பஸ் நிறுத்தம் வந்தபோது, தோல் பையை வைத்திருந்த பெண், அதை அருள் பிரகாஷின்தாயாரிடம் கொடுத்து விட்டு இறங்கிச் சென்றார். கிருஷ்ணா நகர் வந்தவுடன் அருள் பிரகாஷின் பெற்றோர்இறங்கியுள்ளனர்.

இறங்கிய பின் தோல் பையைப் பார்த்தபோது அதில் எதுவுமே இல்லை. ரூ. 3 லட்சத்திற்கான காசோலை, முதல்வர்கொடுத்த பதக்கம், இலவச வீட்டு மனைக்கான பட்டா, பதவி உயர்வுக்கான கடிதம் ஆகிய அனைத்தும் காணாமல்போயிருந்தன.

இதுகுறித்து ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் அருள் பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+