தமிழுக்காக..: நெடுமாறன், ராமதாஸ், திருமா போராட்டம்
சென்னை:
கடைகளின் பெயர்ப் பலகைகள், விலைப் பட்டியல், விளம்பரப் பலகைகளை தமிழிலேயே வைக்க வேண்டும் என்று கோரிதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் சேதுராமன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் தா.வெள்ளையன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், பெயர்ப் பலகைகள் உள்ளிட்டற்றை தமிழிலேயே வைக்கவேண்டும் என்று வணிகர்களுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவியபோராட்டத்தில் இறங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications