கன மழை: தஞ்சையில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசின் வேளாண்துறை ஆணையர்ஜக்மோகன் சிங் ராஜு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்த தொடர் மழைக்கு தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டனம், திருச்சி போன்ற காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நலங்களில் பயிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பெரும்பாலான இடங்களில் நெற் நாற்றுக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பல கிராமங்களில் கண்மாய்கள் உடைந்து வயல்வெளிகளிலும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்தச் சேதம் குறித்து மதிப்பீடு செய்ய வேளாண்துறை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு காவிரிப் பாசன மாவட்டங்களுக்குஇன்று வந்தார்.
காலையில் தஞ்சை வந்த ஜக்மோகன் சிங் ராஜு அம் மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சீராளூர், தென்னங்குடி உள்ளிட்டபல ஊர்களைப் பார்வையிட்டார். சேத மதிப்பை ஆய்வு செய்த அவரிடம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள்கண்ணீர் விட்டு அழுதனர்.
இத்தனையாண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட நாங்கள் இப்போது வெள்ளத்தால் மிக மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம் என அவர்கள் கூறினர். நீரில் மூழ்கிப் போய் விட்ட பயிர்களைக் காட்டி தங்களது அவல நிலையைஅதிகாரியிடம் விளக்கினர்.
கண்மாய்களும், வாய்க்கால்களும் சரிவர தூர் வாரப்படாததால் தான் இரண்டு நாள் மழையிலேயே வெள்ளம் வயல்களில்புகுந்துவிட்டது என்று பல விவசாயிகளும் குற்றம் சாட்டினர்.
ராஜுவுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் உடன் வந்திருந்தார்.












Click it and Unblock the Notifications