பொறியாளர்களிடம் மோசடி: 2 பேர் கைது
மதுரை:
மதுரை, கோவை, ராசிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொறியாளர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஏ.பி.சி. நிறுவனம், மதுரை, கோவை, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் தனது கிளைகளைக்கொண்டுள்ளது. இந்தக் கிளைகளில் தலா ரூ. 15,000 வாங்கிக் கொண்டு பொறியியல் படிப்பு படித்த ஏராளமான இளைஞர்கள்வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
பல மாதங்களாக இந்த இளைஞர்களுக்கு ஏ.பி.சி. நிறுவனம் சம்பளம் தரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோவை,ராசிபுரம் பகுதி ஏ.பி.சி. நிறுவன கிளைகளில் வேலை பார்த்த இளைஞர்கள் மதுரை காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
புகான் பேரில், நிறுவன உரிமையாளர்களான சண்முக சுந்தரம், அனந்தராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இன்றுகாலை அவர்கள் மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறுநீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications