சென்னையில் ரூ.7 லட்சம் திருட்டு விசிடி பறிமுதல்
சென்னை:
சென்னை பர்மா பஜாரில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர் உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி.யின் திருட்டு விசிடி தடுப்பு போலீஸார் பர்மா பஜாரில் சோதனைநடத்தினர்.
அப்போது அப்துல் சலாம் என்பவருக்கு சொந்தமான கடையில் புதிய படங்களுக்கான திருட்டு விசிடி இருப்பது தெரியவந்தது.7ஜி, ரெயின்போ காலனி, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கிரி, போஸ் ஆகிய படங்கள் உள்ளிட்ட 6,015 திருட்டு விசிடிக்கள்கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சமாகும்.
திருட்டு விசிடிக்களை விற்பனை செய்து கொண்டிருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, வியாசர்பாடியைச் சேர்ந்தயூசுப்கனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடை உரிமையாளர் அப்துல் சலாம் தலைமறைவாகி விட்டார்.
அதேபோல் சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு கடையில் ரூ.10,00மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக எல்லீஸ் சோலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.