பெட்ரோல் விலை: திமுக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து திமுக சார்பில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறினார்.

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து நாளை மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகஅறிவித்துள்ளது.

இந் நிலையில் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி வருகிற 10ம் தேதி (புதன்கிழமை) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதோடு வெள்ள நிவாரணம், உயர் நீதிமன்ற உத்தவுப்படி 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை, போக்குவரத்து,மின்வாரியம் உள்பட பொதுத் துறை நிறுவன தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்,

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு மீதம் உள்ள அகவிலைப்படி உயர்வுடன் அனைத்துச் சலுகைகளும் திருப்பித் தரவேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றுகூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+