இன்னக்கி அதிமுக.. நாளைக்கு திமுக
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்கள் முன் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்த விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப் பெறக் கோரிமத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று அதிமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 11 மணி முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்அதிமுகவினர் பெருமளவில் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக அலுவலகம் முன் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில்ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையில் தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல தமிழகம் முழுவதும்போராட்டம் நடக்கிறது.
இதே கோரிக்கைக்காக திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications