மேலும் மோசமடைந்தது அராபத்தின் உடல் நிலை
பாரிஸ்:
பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் நிலைமை மேலும் மோசமடைந்தது.
கோமா நிலையில் இருக்கும் அவரது உடல் நிலை நேற்றிரவில் இருந்து மிகவும் மோசமடைந்துவிட்டதாக ராணுவ பயிற்சிமருத்துமனையின் செய்தித் தொடர்பாளர் கிரிஸ்டியன் எஸ்ட்ரிபே தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் அராபத்தின் மனைவி சுஹாவின் எதிர்ப்பையும் மீறி அவரைக் காண மூத்த தலைவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்துபாரிஸ் வந்திறங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சுஹா மருத்துவமனைக்குள் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
இந்தத் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அராபத்தை உயிருடன் புதைக்க முயல்வதாக சுஹா குற்றம்சாட்டியுள்ளார். சுஹாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீன பிரதமர் மற்றும் அமைச்சர்கள், இதனால்மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக சுஹா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.