பக்தையை மகளோடு கடத்திய சாமியார் !
சென்னை:
தனது பக்தை மற்றும் அவரது மகளைக் கடத்திச் சென்ற போலி சாமியாரை போலீஸார் பிடித்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் என்ற சதுர்வேத சுவாமி. சென்னையில் ஆஸ்வர கிளை வைத்துள்ளார்.
இவரது தீவிர பக்தையானார் பிரபல தொழிலிதிபர் (பெயரை போலீஸார் குறிப்பிடவில்லை) ஒருவரின் மனைவி.
தனது குடும்பப் பிரச்சினைகளை சதுர்வேத சுவாமியிடம் தொழிலதிபரின் மனைவி எடுத்துக் கூற, ஹைதராபாத்தில் உள்ள எனதுஆசிரமத்தில் வைத்து பரிகாரம் செய்யலாம் என்று கூறியுள்ளார் சுவாமிகள்.
இதை நம்பிய தொழிலதிபரின் மனைவி தனது மகளுடன் சாமியாருடன் ஹைதராபாத் சென்றுள்ளார். இதையடுத்து தனதுமனைவியும், மகளும் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் தொழிலதிபர்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, இருவரும் சாமியாரால் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டதுதெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை மீட்டனர்.
சாமியார் தங்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிக் கடத்தி வந்துவிட்டதாக அப்போது போலீஸாரிடம் தொழிலதிபரின் மனைவிகூறியுள்ளார்.
இதையடுத்து சாமியாரை போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர். உண்மை விவகாரத்தை அறிய தீவிரவிசாரணை நடக்கிறது.