ஜெ. வழக்கு: பெங்களூரில் டிசம்பரில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் அடுத்த மாதம் தொடங்கும் என சட்டத்துணை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி, விழுப்பபரம் அருகே உளுந்தூர்பேட்டையில் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தமிழில் இருந்து கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி இம் மாத இறுதியில் முடிந்துவிடும்.
இதனால் அடுத்த மாதமே விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் துவங்கிவிடும்.
நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 700 நீதிபதிகளின் பதவிகள் விரைவில் நிரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications