பெட்ரோல்: மாநிலம் முழுவதும் திமுக போராட்டம்
உளுந்தூர்பேட்டை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக நேற்று போராட்டம் நடத்தியது. இந் நிலையில் திமுக இன்று போராட்டம் நடத்தியது.மத்திய கூட்டணி அரசில் இருந்து கொண்டே மத்திய அரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை சேப்பாக்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் ஆட்சியில் நாங்கள் இடம் பெற்றிருந்தபோதும்,பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளோம்.
மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க திமுக எந்தக் காலத்திலும் எதற்காகவும் தயங்காது. இந்தப் போராட்டமும் அந்தவகையில்தான் நடத்தப்படுகிறது.
எங்கள் போராட்டத்தை ஜெயலலிதா விமர்சிக்கிறார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனை என்றால்போராட திமுக தயங்காது. இந்த விலையுயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், பெறும் என்று நம்புகிறோம்.
பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு 5 சதவீத வரி போடுகிறது. அதை ரத்து செய்தாலே விலை குறைந்துவிடும். அதைவிட்டு விட்டுவிலையைக் குறைக்கச் சொல்லி போராட்டம் நடத்தியுள்ளது அதிமுக என்றார் ஸ்டாலின்.
மதுரையில் கம்பம் செல்வேந்திரன் தலைமையிலும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும், திருச்சியில்ரகுமான்கான் தலைமையிலும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதே போல மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது.
இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications