பெட்ரோல்: மாநிலம் முழுவதும் திமுக போராட்டம்
உளுந்தூர்பேட்டை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக நேற்று போராட்டம் நடத்தியது. இந் நிலையில் திமுக இன்று போராட்டம் நடத்தியது.மத்திய கூட்டணி அரசில் இருந்து கொண்டே மத்திய அரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை சேப்பாக்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் ஆட்சியில் நாங்கள் இடம் பெற்றிருந்தபோதும்,பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளோம்.
மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க திமுக எந்தக் காலத்திலும் எதற்காகவும் தயங்காது. இந்தப் போராட்டமும் அந்தவகையில்தான் நடத்தப்படுகிறது.
எங்கள் போராட்டத்தை ஜெயலலிதா விமர்சிக்கிறார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனை என்றால்போராட திமுக தயங்காது. இந்த விலையுயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், பெறும் என்று நம்புகிறோம்.
பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு 5 சதவீத வரி போடுகிறது. அதை ரத்து செய்தாலே விலை குறைந்துவிடும். அதைவிட்டு விட்டுவிலையைக் குறைக்கச் சொல்லி போராட்டம் நடத்தியுள்ளது அதிமுக என்றார் ஸ்டாலின்.
மதுரையில் கம்பம் செல்வேந்திரன் தலைமையிலும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும், திருச்சியில்ரகுமான்கான் தலைமையிலும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதே போல மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது.
இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications