மழைக்கு பலியான 29 பேர் குடும்பத்துக்கு ஜெ. உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பலியான 29 பேன் குடும்பங்களுக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வட கிழக்குப் பருவ மழைக்கு இதுவரை 29 பேர்பலியாகியுள்ளனர்.
மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இவர்கள் பலியாகியுள்ளது குறித்துபெரும் வருத்தமடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அக் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications