ராமநாதபுரத்தில் மீண்டும் பரவும் மலேரியா!
ராமநாதபுரம்:
தொடர் மழை காரணமாக ராமநாதபுரத்தில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது.
இப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவிய காய்ச்சலால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்துமாவட்ட நிர்வாகம் பல நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நோயின் தாக்கம் பெருமளவு குறைந்தது.
இந் நிலையில் அப் பகுதியில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுள்ளனர்.
இப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகியுள்ளது. இதனால் தான் மீண்டும்மலேரியா பரவி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொசுக்களைக் கட்டுப்பட்டுத்த நீர் நிலைகளில் மருந்துதெளிப்பது, மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்குவது ஆகிய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications