Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா மீது வசை பொழியும் எஸ்.ஆர்.பி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பேயை விரட்டினாலும் பெருமை தன்னை வந்து சேர வேண்டும் என்று கருதுபவர் முதல்வர் ஜெயலலிதா என்று காங்கிரஸ்சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

வரும் 16ம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

புதிய கவர்னர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன்முறையாக சட்டமன்றம் கூடுகிறது. நம் முதல்வரைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியினரை எதிரிக் கட்சிகளாகவும் பொறுப்பற்றவர்களாகவும் கருதுபவர்.

விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் விடை கொடுப்பதையே கடமையாக கருதுபவர். தான் என்னும் தலைக்கணத்துடன்ஆணவத்துடன் எதையும் சந்திப்பார், நடந்து கொள்வார்.

தன் கட்சிக்காரக்கள் மட்டுமின்றி, மற்ற கட்சிக்காரர்களும் ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றுஎதிர்பார்ப்பவர். மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விட தனது புகழ் புடவதற்குரிய செயல்களைச் செய்வதிலேயே குறியாகஇருப்பார்.

பேயை விரட்டினாலும் பெருமை தன்னையே வந்து சேர வேண்டும் என்று கருதுபவர்.

ஆனால், ஜெயலலிதாவே விரும்பாவிட்டாலும் தமிழக எதிர்க் கட்சிகள் இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன.இதனால் எதிர்க் கட்சிகளை ஒதுக்கித் தள்ள முடியாத இக்கட்டான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் கூடும் சட்டசபைக் கூட்டம் பல எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும். தன்னை முன்னிலைப்படுத்திவிளம்பரம் தேடும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படாமல் மக்களுக்கு நல்லது செய்ய சட்டமன்றக் கூட்டத்தை முதல்வர்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு எஸ்.ஆர்.பி. காட்டமான அறிக்கை விட்டு இப்போதே சட்டமன்றக் கூட்டத்துக்கு காரம் சேர்த்துவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+