கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது!!
சென்னை:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் நேற்றிரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 3ம் தேதி கோவிலுக்குள் வைத்தே மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியது.
இந்தக் கொலை நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், கூலிப் படையை வைத்து இந்தக் கொலையை சங்கராச்சாரியாரே செய்ததாகத்தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் தங்கியிருந்த சங்கராச்சாரியாரை நேற்றிரவு 10 மணிக்கு தமிழக சிறப்பு கமாண்டோ படைகைது செய்தது. எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான இந்தப் படை நேற்றிரவு தனி விமானத்தில் ஹைதராபாத்விரைந்தது. பின்னர் மகபூப் நகரில் தங்கியிருந்த ஜெயேந்திரரை கைது செய்து, தனி விமானம் மூலம் இன்றுஅதிகாலை 3 மணிக்கு சென்னை அழைத்து வந்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. பிரேம்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் காஞ்சிபுரம் அழைத்துச் செல்லப்பட்ட சங்கராச்சாரியார், அங்கு செசன்ஸ் நீதிமன்றமாஜிஸ்திரேட் உத்தரமராஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்கள் (26ம் தேதி வரை) காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் வேனில் வேலூர்கொண்டு செல்லப்பட்ட சங்கராச்சாரியார் அங்கு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
70 வயதான ஜெயேந்திரர் மீது கொலை, சாட்சிகளை மறைத்தல், சதி செய்தல் ஆகிய முக்கியமான 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சங்கர ராமன் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளியாகவும்அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications