நான் அப்பாவி என்கிறார் சங்கராச்சாரியார்
சென்னை:
சங்கர ராமன் கொலை வழக்கில் தான் நிரபராதி என்றும், இந்தக் கொலை வழக்கில் போலீசார் தன்னிடம் பல முறை விசாரணைநடத்தியுள்ளதாகவும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
தனது ஜாமீன் மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர்கள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் என்னையும் வலுக்கட்டாயமாகசேர்த்துள்ளார்கள். இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தக் கொலை தொடர்பாக என்னிடம் போலீசார் பலமுறை விசாரித்தனர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன்.
நான் பெரிதும் மதிக்கப்படுகிற மத குரு. எனக்கு ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் சொல்லும் எந்த உத்தரவுக்கும் முழுமையாக கட்டுப்பட்டுநடப்பேன் என்று கூறியுள்ளார்.
விளக்கம் கேட்கும் மத்திய அரசு:
இதற்கிடையே சங்கராச்சாரியாரின் கைது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தக் கைது குறித்து கருத்து எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம்கேட்டரோது, இந்த விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலானது. இதில் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை.
ஆனால், தமிழக அரசிடம் கைது குறித்த விளக்கத்தைக் கேட்டுப் பெறுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications