தமிழகத்தில் மீண்டும் கன மழை!
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தீபாவளிக்கு முன்சற்று மழை ஓய்ந்தது. நேற்று தூறலோடு நின்றது. இதனால் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளபகுதிகளில் கொஞ்சம் நிம்மதி திரும்பியது.
இந் நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில்ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலமே இதற்குக் காரணம் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
சென்னை நகரிலும் மிக கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தஞ்சை மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில் தலா ஒரு பெண் பலியாகியுள்ளனர். தஞ்சை அருகே 20 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன. 9 பேர்படுகாயமடைந்தனர்.
இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியைத் தொட்டுள்ளது. அணை நிரம்புவதற்கு இன்னும் 21அடி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications