சங்கராச்சாரியார்: ஆளுநரிடம் ஏவி.எம்.சரவணன் மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை கெளவரமாகவும், நன்றாகவும் நடத்த உத்தரவிடுமாறு தமிழக ஆளுநர்எஸ்.எஸ்.பர்னாலாவிடம் அவரது பக்தர்களான சினிமாத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், டாக்டர் பத்ரிநாத் உள்ளிட்டோர் மனுகொடுத்துள்ளனர்.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை தலைவர் டாக்டர் பத்ரிநாத், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், டாக்டர்ரங்கபாஷ்யம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

ஜெயேந்திரர் கைதுக்கு அவர்கள் ஆளுநரிடம் அதிருப்தி தெரிவித்தனர். சிறையில் அவரை மிகவும் மரியாதையாகவும், கெளவரமாகவும்நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் ஆளுநரைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

சங்கராச்சாரியாரின் அதிதீவிர பக்தரான நாடக நடிகர் எஸ்.வி.சேகர் இப்போது அதிமுகவில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல்திகைத்துப் போய் இருக்கிறார். வழக்கமாக காஞ்சி மடத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முதல் குரல் இவரிடம் இருந்து தான் வரும்.

நேற்று சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது, சங்கராச்சாரியாரின் சீடரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிஒருவரும் கோர்ட் ஹாலுக்கு வந்திருந்தார். இது மரபுகளுக்கு எதிரானது என முன்னணி வழக்கறிஞர் அருள்மொழி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+