பர்னாலாவுடன் கருணாநிதி சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இன்று திடீரென ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்தார்.
ஆளுநராக பர்னாலா பொறுப்பேற்ற பின் அவரை கருணாநிதி சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்பர்னாலாவை கருணாநிதி சந்தித்துள்ள முக்கியத்துவம் பெறுகிறது.
அரை மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளிக்கையில்,
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. காவிரி டெல்டா பகுதிவிவசாயிகளின் துயர், மழை சேதம் குறித்து பர்னாலாவிடம் விவாதித்தேன்.
ஜெயேந்திரர் போன்ற பெரிய மடாதிபதிகள் இதுபோன்ற நிலைக்கு ஆளாகும்போது மற்ற மடாதிபதிகள் அதுகுறித்து எதிர்ப்பு தெரிவிப்பதுஇயற்கைதான்.
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஏற்கனவே இருந்த ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து பர்னாலாவிடம் பேசவில்லை என்றார்கருணாநிதி.
கருணாநிதி இப்படிக் கூறினாலும் கூட ஜெயேந்திரர் குறித்தும் அவர்கள் விவாதித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. கருணாநதியுடன் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறனும் சென்றிருந்தார்.












Click it and Unblock the Notifications