For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லி ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் பரிதாபமாக இறந்தார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பாட்னாவிற்கு கிளம்பிய ஜன் சதரன் ரயிலைப் பிடிக்க பயணிகள் முற்பட்டபோது இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 3வது பிளாட்பாரத்தில்ரயில் புறப்பட்டபோது, ஏராளமான பயணிகள் படிகளில் வேகமாக இறங்கி ரயிலை நோக்கி ஓடினர்.

அப்போது ஒருவர் தடுமாறி கீழே விழ, அவர் மீது பின்னால் வந்தவர்கள் தடுக்கி விழுந்ததில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 10படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலிருந்த ரயில்வே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல்பலியாகினர். இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பிகாருக்கு செல்ல இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தீபாவளி விடுமுறையையொட்டி நாடு முழுவதும் ரயில், பஸ்களில் பயணிகளின் நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X