கல்கி ஆசிரமத்தில் குண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியையடுத்து அங்கு பரபரப்புஏற்பட்டது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு என்ற இடத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு கோவிலும் உள்ளது. இங்குஏராளமான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலிருந்து வருவது வழக்கம்.

இந் நிலையில் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆசிரமத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என போனில் பேசியவர் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆசிரமத்தில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கும்படையினருடனும், மோப்ப நாய்களுடனும் சோதனை நடத்தப்பட்டது.

இறுதியில் ஆசிரமத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. சங்கராச்சாரியார் டென்சனில் இருக்கும் தமிழகத்தில் இந்தப்புரளியை வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்டுள்ளனர்.

பிரேம்ஸ்-2: கோவையில் சோதனை

இதற்கிடையே தொழிலதிபரின் மனைவியையும் மகளையும் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட சதுர்வேதி சுவாமிகளின் கோவை மடத்தில்இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சுவாமிகளுக்கு ரூ. 6 கோடிக்கு சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும் பணக்கார பெண் பக்தைகளிடம் சுருட்டிய பணம் இது என்கிறார்கள் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+