மழைக்கு மேலும் 12 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கன மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று முதல் பெய்த கன மழையால் தமிழகம் முழுவதும் மேலும் 12பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை பெரம்பூல் இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலியாயினர்.
திருவாரூரில் வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவரும் அவரது பெண் குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர். இதே மாவட்டத்தில்மேலும் ஒருவரும் மழைக்கு இறந்தார்.
தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் தலா 2 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
இதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் வலுவிழந்துள்ளது. இதனால் மழையில் வேகம் குறையஆரம்பித்துள்ளது. இருப்பினும், திருநெல்வேலி, கடலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதல் வெயிலடிக்க ஆரம்பித்துள்ளது.