ஜெவிடம் முழு விளக்கம் கோருகிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த முழு பின்னணியையும் விளக்கும் அறிக்கையை முதல்வர்ஜெயலலிதா வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கைது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில்மடத்தைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த வழக்கு, பின்னணி, நடந்ததுஎன்ன என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இளங்கோவன்:

சங்கராச்சாரியின் கைதை வரவேற்றுள்ள மத்திய அமைச்சர் இளங்கோவன், இந்தக் கைதைத் தொடர்ந்து பல மர்மங்கள்,உண்மைகள் வெளியாகப் போகின்றன என்றார்.

வழக்கறிஞர்கள் அதிருப்தி:

காஞ்சி சங்கராச்சாரியார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருப்பது முறையல்ல என்று பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கிமினல் வழக்குகள் உள்பட எந்த வழக்கானாலும் கைது செய்யப்பட்டவர்கள், மாவட்ட அமர்வு (செஷன்ஸ்)நீதிமன்றத்தை அணுகிதான் ஜாமீன் கோருவர், அதுதான் மரபாகும். ஆனால் ஜெயேந்திரர் விஷயத்தில் இது தலைகீழாகமாறியுள்ளது.

நேரடியாக உயர்நீதிமன்றத்தை ஜெயேந்திரர் தரப்பு அணுகியுள்ளது.

இது தவறு என்று மூத்த வழக்கறிஞர்களில் சிலர் கூறினாலும், இது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது தான் எனவேறு சில வழக்கறிஞர்கள் கூறினர்.

மேலும், வீட்டுக் காவல் கோரி ஜெயேந்திரர் தரப்பு கோரிக்கை விடுப்பதற்கும் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் அதிருப்திதெரிவித்துள்ளனர். ஜெயேந்திரருக்கு வீட்டுக் காவல் அளிக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும்அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+