திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நாளை சூர சம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. காலை 9.30 மணிக்கு உச்சிக் கால பூஜை, 10 மணிக்குதீபாராதனை, 10.30க்கு மூலவர் சிலைக்கு சஷ்டி தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது.
மாலை 4 மணியளவில் சூர பத்மனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications