ஜெயலட்சுமி: அமைச்சர்களை விட்டது ஏன்?-பாஜக
சென்னை:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய தமிழக அமைச்சர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பா.ஜ.க. எம்எல்ஏவான ராஜா நிருபர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவர் சங்கராச்சாரியார். அவர் எப்படி தப்பி நேபாளத்துக்கு ஓட முடியும்.சங்கராச்சாரியாரை கிரிமினல் குற்றவாளி என்று சொல்லி, அவரை அத்துமீறி அராஜகமான முறையில் கைது செய்துள்ளார்எஸ்.பி.பிரேம்குமார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஜெயலலலிதா கூறுகிறார். அப்படியென்றால் சிவகாசி ஜெயலட்சுமியால் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் (ஓபி, நயினார் உள்ளிட்டார்) ஏன் கைது செய்யப்படவில்லை. இது அசிங்கமாக இல்லை? என்றார்ராஜா.
எம்எல்ஏ கே.என். லட்சுமணன் பேசுகையில், இந்தக் கைது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் தந்தோம். ஆனால், கேள்வி நேரம்முடிந்தவுடன் இந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க விடாமல் முதல்வர் ஜெயலலிதாவை விளக்க அறிக்கை வாசிக்கஅழைத்துவிட்டார் சபாநாயகர் காளிமுத்து.
இதை எதிர்த்ததால் எங்களை அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டநாள், நேரம், முறையை கண்டிக்கிறோம் என்றார்.
ஜெயேந்திரர்- தம்பி சந்திப்பு:
இதற்கிடையே வேலூர் சிறைக்குச் சென்ற சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தலைவரும் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவருமானகுருமூர்த்தி, ஜெயேந்திரரின் சொந்தத் தம்பி விஸ்வநாதாச்சாரி ஆகியோர் இன்று சங்கராச்சாரியாரை சந்தித்தனர்.
சங்கராச்சாரியாரைப் பார்த்தவுடன் இருவரும் கண்ணீர் விட்டு அழுதபடி காலில் விழுந்து வணங்கியதாக போலீசார் நம்மிடம்தெரிவித்தனர்.
விஜயேந்திரர் கோரிக்கை:
இந் நிலையில் விஜயேந்திரர் ஒரு ஆங்கில நாளிதழுத்துத் தந்துள்ள பேட்டியில், மடத்தின் செயல்பாடுகளை யாரும் முடக்கமுடியாது. நாளை முதல் பக்தர்கள் சிறப்புப் பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாமம், கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்துஆச்சாரியாரின் விடுதலைக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.