இந்தியா-பாக். பதற்றம் தணித்த ஆர்மிடேஜ் ராஜினாமா
வாஷிங்டன்:
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டபோது இரு தரப்புக்கும் இடையிலும் பேச்சு நடத்தி பதற்றத்தைத்தணித்தவர் இவர் தான்.
இந்தியாவின் நண்பராகக் கருதப்படும் ஆர்மிடேஜ் ஒரு குத்துச் சண்டை வீரர். காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைபாகிஸ்தான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் அதிபர் பர்வேஸ் முஷாரபை நெருக்கியவர் இவர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து தீவிரவாத முகாம்களை மூட அந் நாட்டுக்கு பல வகைகளிலும் நெருக்கடிதந்தவர் இவர்.
ஆசியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளை அமலாக்குவதில் மிகத் திறமையாக செயல்பட்டு வந்த ஆர்மிடேஜ், நேற்றுதனது ராஜினாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இராக் போரை எதிர்த்து வெளியுறவு அமைச்சர் காலின் பாவல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,அவரது துணை அமைச்சரான ஆர்மிடேஜும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications