வழக்கை திசை திருப்ப முயற்சி: சிபிஎம் குற்றச்சாட்டு
டெல்லி:
சங்கராச்சாரியாரின் கைதை அரசியலாக்கி, கொலை வழக்கையே திசை திருப்ப முயற்சிகள் நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கைதை கண்டித்து இன்று விஸ்வ இந்து பரிஷத் தலைமையில் சங் பரிவார் அமைப்புகளின் கூட்டம் சென்னையில்நடந்தது. ஜாமீன் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இக் கூட்த்தில் விவாதிக்கப்பட்டது.
அதே போல மகாராஷ்டிரத்திலும் வி.எச்.பியின் தலைமையில் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில், சங்கராச்சாரியாரின் கைதைகண்டித்து நாளை மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீதாராம்யெச்சூரி,
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சங்கராச்சாரியார் மீதான குற்றச்சாட்டுக்கள்சாதாரணமானவை அல்ல. இதை அரசியாலாக்கி கொலை வழக்கையே திசை திருப்பி அவரைத் தப்ப வைத்துவிடலாம் எனவி.எச்.பி. கருதுகிறது. இது தவறான செயல்.
மேலும் இந்த விவகாரத்தில் மற்ற மதங்களையும் முடிச்சுபோடவும் சில அமைப்புகள் முயல்கின்றன என்றார்.