சட்டத்தின் முன் அனைவரும் சமம்: ஜெயலலிதா
சென்னை:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்ஜெயலலிதா.
பின்னர் அதே மேடையில் வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் சேகர்பாபுவின் மைத்துனர் திருமணத்தையும் நடத்திவைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதா பேசியதாவது:
கழகக் குடும்பங்கள் விழா என்பதை கழகத்தின் விழாவாகவே கருதுவது என் வழக்கம். பல்வேறு கடமைகளுக்கு நடுவேஉங்களை இப்படி ஒரே இடத்தில் காணும்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அதுவும் நாம் இப்போது சந்திப்பது சாதாரண சந்திப்பல்ல. சாதனைகள் பலவற்றுக்காக சரித்திரமே நம்மை பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில் நடக்கும் சந்திப்பு இது.
சாதனை என்றால் என்ன? காலம் நம்மிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறதோ அதை நூறு சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன்நடத்தி முடிப்பது தானே. அதில் நமது சொந்த விருப்புக்கோ வெறுப்புக்கோ இடமில்லை. இருக்கவும் கூடாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமமே. இதுமே நமது தாரக மந்திரம். நாம் வீரமும் விவேகமும் பெற்றவர்கள். இதனால் தான்தொடர்ந்து வெற்றிகளை ஈட்டுகிறோம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications