2வது நாளாக டெல்லியில் பாஜக உண்ணாவிரதம்
டெல்லி & சென்னை:
சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் அனுப்பியதைக் கண்டித்து டெல்லியில் பா.ஜ.க. இன்று இரண்டாவது நாளாகஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
நேற்றைய உண்ணாவிரதத்துக்கு பா.ஜ.க. தலைவர் அத்வானி தலைமை தாங்கிய நிலையில், இன்றைய போராட்டத்துக்குமுரளிமனோகர் ஜோஷி தலைமை தாங்கினார். அவருடன் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் உள்பட ஏராளமானபா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் தொண்டர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஜனைப் பாடல்களைப் பாடியபடி இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.
சங்கராச்சாரியார் 3 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதால் 3 நாள் தர்ணா, உண்ணாவிரதத்துக்கு திட்டதாகவும், அவரைமேலும் போலீஸ் காவலில் வைக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ள நிலையில், அதை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில், தங்களதுபோராட்டமும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
நாளை டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தர்ணாவுக்கு தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில் நாளை அத்வானிசென்னையில் போராட்டம் நடத்தவுள்ளார்.
மனிதச் சங்கிலி:
இதற்கிடையே ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி ஆகியவற்றைச்சேர்ந்த தொண்டர்கள் கோவில்கள் முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள கோவில்கள் முன் பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மனிதச் சங்கிலி அமைத்துப்போராட்டம் மேற்கொண்டனர். இதில் பெண்கள் கருப்புச் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர்வடிவுடையம்மன் கோவில், பாடி படவேட்டம்மன் கோவில், தாம்பரம் பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய கோவில்கள்,இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர், எச்.ராஜா உள்ளிட்டோர் இந்தப்போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஆந்திரா, கர்நாடகத்திலும்:
இதே போல ஆந்திரம், கர்நாடகத்திலும் இன்று மாநில பா.ஜ.க. தலைவர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications