For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசுக்கு தொடர்பில்லை: மன்மோகன்

By Staff
Google Oneindia Tamil News

இம்பால்:

சங்கரராமன் கொலை தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றுபிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இம்பாலில் இருந்து கெளகாத்தி செல்லும் முன் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் குற்றம் சாட்டுவதுபோல் ஜெயேந்திரர் கைதில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும்இல்லை. இதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

ஜெயேந்திரரின் வயது மற்றும் சமூகத்தில் அவருக்கும் இருக்கும் உயர்ந்த மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரைமரியாதையுடன் நடத்த வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஆர்வம் காட்டிய சங்கர நேத்ராலாயாவிற்கு (கெளகாத்தி) பிரதமர்செல்வது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,

இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்கள் மக்களுக்கு சிறப்பான சேவை செய்கிறார்கள். அதற்காக அந்த அமைப்புக்குஎனது நன்றியைத் தெரிவிப்பதற்காகவே செல்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X