நள்ளிரவு வரை மாராதான் விசாரணை: திணறும் ரகு
காஞ்சிபுரம்:
இளைய மடாதிபதி விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் மீண்டும் இன்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
விஜயேந்திரரின் தம்பியும் சங்கரராமன் கொலையில் அப்புவுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையே பாலமாகவும் செயல்பட்டரகுவிடம் போலீஸ் விசாரணை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.
நேற்று காஞ்சி எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ரகு மற்றும் மடத்தின் நிர்வாகிகளான நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி,சுந்தரேச அய்யர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மற்ற இருவரையும் 2 மணி நேரம் விசாரித்து அனுப்பிவிட்டபோலீசார், ரகுவிடம் மட்டும் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
எஸ்.வி. டேவிட்சன், கூடுதல் எஸ்பி சக்திவேல் அடங்கிய டீம் இவரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தியது. கிடுக்கிப்பிடிவிசாரணையில் மனரீதியிலும் உடல்ரீதியும் ரொம்பவும் சோர்ந்துவிட்ட ரகு இரவு 11 மணிக்குத் தான் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந் நிலையில் இன்று பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைகளால் ரகு நிலைகுலைந்து போயிருப்பதாகவும், மெதுவாக அனைத்து உண்மைகளையும் அவர் வெளியிடஆரம்பித்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.