மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு
சென்னை:
ஜெயேந்திரரை ஜாமீனில் விடக் கோரி வரும் 26ம் தேதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறி ஜாமீன் மனுவை நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் நிராகத்து விட்டார்.
இந் நிலையில் வரும் 25 ம் தேதியுடன் ஜெயேந்திரரின் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வருகிறது. அடுத்த நாள் அவர் காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அப்போது அவரது காவலை காஞ்சிபுரம் நீதிமன்றம் மீண்டும் நீட்டித்தால், உடனேமீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
காவல் நீட்டிக்கப்படாவிட்டால், அவர் தானாகவே விடுவிக்கப்பட்டு விடுவார்.












Click it and Unblock the Notifications