சிபிஐயிடம் திட்டு வாங்கிய ஜெயலட்சுமியின் உறவினர்!
மதுரை:
மதுரையில் நடந்து வரும் சிபிஐ விசாரணையின்போது அழைப்பே இல்லாமல் ஜெயலட்சுமியின் உறவினர் ஆஜரானதால்பரபரப்பு ஏற்பட்டது.
அழைப்பு இல்லாமல் வரக் கூடாது என்று சிபிஐ அதிகாரிகள் அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
போலீசார் மீது சரமாரியாக பாலியல் புகார்களை அடுக்கியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.மதுரையில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது.
தற்போது ஜெயலட்சுமி குடும்பத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர குற்றம் சாட்டப்பட்டுள்ளகாவல்துறையினடமும் விசாரணையை ஆரம்பித்துவிட்டது சிபிஐ.
இந் நிலையில் இன்று காலை நாராயணசாமி என்பவர் சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார். விசாரணைக்கு அவருக்கு சிபிஐ அழைப்புஅனுப்பாத நிலையில் அவராகவே விசாரணைக்கு வந்திருந்தார்.
அலுவலகத்திற்குள் சென்ற அவரிடம், நீங்கள் எதற்காக வந்தீர்கள், உங்களை விசாரணைக்கு அழைக்கவில்லையே, யார்உங்களை இங்கே அனுப்பியது என்று சிபிஐ இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் என்பவர் மிகக் கடுமையாகக் கேட்டார். பின்னர்அவருக்கு டோஸ் தந்து, கெட்-அவுட் சொல்லி வெளியேற்றினார்.
இதனால் கோபத்துடன் வெளியே வந்தார் நாராயணசாமி. அவரிடம் விசாரணை நடக்கவில்லையா என்று நிருபர்கள்கேட்டபோது, ஆபாசமாக திட்டியபடியே அங்கிருந்து சென்று விட்டார் நாராயணசாமி.
சிபிஐ அதிகாரிகளிடம் செம திட்டு வாங்கியிருப்பார் போலிருக்கிறது!!












Click it and Unblock the Notifications