30 பேர் பலியா?: புலிகள் இயக்கம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

மட்டக்களப்பில் கருணா தரப்பினர் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 30க்கும் மேற்பட்ட புலிகள் பலியானதாக வந்துள்ளசெய்திகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

இனப் போரில் உயிர்நீத்த புலிகளின் நினைவாக மாவீரர் வாரத்தை அந்த இயக்கம் அனுசரித்து வரும் நிலையில், கண்ணிவெடித்தாக்குதலில் 30 பேர் பலியானதாக இலங்கை ராணுவமும் கருணா தரப்பினரும் கூறியுள்ளனர்.

இதை மறுத்துள்ள புலிகள் இயக்கம், மாவீரர் தினத்தை இருட்டடிப்பு செய்ய ராணுவம் செய்யும் மோசடிப் புரளி இது என்றுகூறியுள்ளது.

மட்டக்களப்பில் சில விடுதலைப் புலிகள் சென்ற டிராக்டர் கிரனைட் குண்டின் மீது ஏறியதாகவும், அந்த இடத்தை டிராக்டர் கடந்தசில வினாடிகள் கழித்தே அது வெடித்ததாகவும், இதில் ஒரு விடுதலைப் புலி மட்டும் லேசான காயமடைந்ததாகவும் அந்தஇயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் கூறியுள்ளார்.

இந்த சின்ன விபத்தைத் தான் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக திசை திருப்ப முயல்கிறது இலங்கை ராணுவம் என்றார்.

இதற்கிடையே மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் கருணாவின் பெயரில் இலங்கை ராணுவத்தினர் துண்டுப் பிரசுரங்களைபோட்டுள்ளனர். அதில் மாவீரர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் இந்தப் பிரசுரங்களை மட்டக்களப்பில் ராணுவம் போட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+