தற்கொலை கூடாது: சங்கர மடம் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் விடுதலைக்காக யாரும் தற்கொலை முடிவை நாடக் கூடாது என்று சங்கர மடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கர மடத்தின் செய்தித் தொடர்பாளரான சங்கரன் கூறுகையில்,
ஜெயேந்திரர் விடுதலை தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த வாலிபர் கோவை மாவட்டம் பல்லடத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் விஜயேந்திரர் வேதனை அடைந்துள்ளார்.
அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சிறப்பு பிரார்த்தனையை அவர் நடத்தினார். ஜெயேந்திரர் விடுதலைக்காக யாரும்தற்கொலை செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைக்காக அனைவரும் சேர்ந்து திருவிளக்கு பூஜையை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஞ்சி மடத்திற்கு புதிதாக சங்கராச்சாரியார் தேர்வு செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்றார் சங்கரன்.












Click it and Unblock the Notifications