சங்கரராமனை கொன்ற முக்கிய கொலையாளி கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அனில் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பு, ரவி சுப்பிரமணியம், அனில் ஆகிய 3முக்கியக் குற்றவாளிகள் பிடிபடாமல் இருந்தனர்.
இவர்களில் சங்கரராமனை அரிவாளால் வெட்டிய கும்பலில் இடம் பெற்றிருந்த முக்கிய நபர் அனில். போலீஸ் பிடியில் சிக்காமல்தண்ணி காட்டி வந்த அனிலை நேற்று போலீசார் மடக்கிவிட்டனர்.
அவரை போலீஸார் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.
கொலைக்குத் திட்டம் போட்டு, ஆட்களைத் தயார் செய்த அப்பு, இத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்து கொலையாளிகளுக்கு பணபட்டுவாடா செய்த ரவி சுப்ரமணியம் ஆகிய மற்ற இரு குற்றவாளிகளும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.












Click it and Unblock the Notifications