மூடப்பட்ட மும்பை யு.எஸ் தூதரகம் மீண்டும் திறப்பு
மும்பை:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக மூடப்பட்ட அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்கர்கள் மீது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருப்பதாகவும், தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாகவும் அமெரிக்க உளவு நிறுவனம் நேற்று தகவல்அளித்தது.
இதையடுத்து மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் மூடப்பட்டது. இந்தியாவில் உள்ளஅமெரிக்கர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக் கொண்டது.
இந் நிலையில் தூதரக வளாகத்தில் மத்திய புலனாய்வுத் துறை, ஆந்திர காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
இதையடுத்து மும்பை அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம்போல் தூதரகப் பணிகள் நடந்தன. நேற்றுதூதரகம் மூடப்பட்டதால், ஏமாற்றம் அடைந்து திரும்பியவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தூதரகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications