ஜெயேந்திரர்: இந்துத்துவாவுக்கு திரும்புவோம்- அத்வானி
ராஞ்சி:
இந்துத்துவா கொள்கைக்கு திரும்ப ஜெயேந்திரர் கைது விவகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றுபாஜக தலைவர் அத்வானி தெரிவித்தார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:
ஜெயேந்திரர் கைது என்பது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது குறித்து மிக நீண்ட விவாதம் நடத்தியபின்பே, கைதுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்.
கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களின் நம்பிக்கையை பெரிதும் பாதிக்கும் செயலாகும்.
இது பழிவாங்குவதற்காகவும், யார் பெரியவர் என்பதற்காகவும் நடத்தப்பட்ட நடவடிக்கையாகும்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டவிதம், அவர் காவலில் வைக்கப்பட்ட முறை அவருக்கு எதிராகக் கூறப்படும் பழிச் சொல்அண்மைக்காலங்களில் இந்து மதத்திற்கு ஏற்படாத களங்கமாகும்.
இதற்கான பிரச்சாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 2 முக்கிய கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்து விரோத சக்திகள் ஈடுபட்டுவருகின்றன.
இந்த்துவா கொள்கைக்கு திரும்ப ஜெயேந்திரர் கைது விவகாரத்தை பயன்படுத்தக்கூடிய நிலை உருவாகி உள்ளது என்று கூறினார்.