இ-மெயில் மிரட்டல்: வாலிபர் கைது!
சென்னை:
டாஸ்மாக் மதுக் கடைகள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத் தலைமை அலுவலகத்துக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில், சென்னைபாரிமுனை முதல் கூடுவாஞ்சேரி வரை உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் கடைகளில், 5 கடைகள் வெடிகுண்டுகள் வைத்துத்தகர்க்கப்படும்.
உடனடியாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குண்டுவெடிப்பு தொடரும்என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மெயில் குறித்து சென்னை மாநகர சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் டாஸ்மாக் அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
மெயிலை அனுப்பியவரின் இ-மெயில் ஐடி மற்றும் அது அனுப்பப்பட்ட இடம் ஆகியவற்றை வைத்து போலீசார் தங்கள்புலனாய்வை தொடங்கினர் போலீஸார்.
இந்த இ-மெயில் அனுப்பப்பட்டது ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் இருந்து என்பது தெரியவந்தது. இங்கிருந்து மெயில்அனுப்பப்பட்ட கம்ப்யூட்டரும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அந் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில்,பிரேம்குமார் என்பவர்தான் அந்த மெயிலுக்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். விஜயகாந்த்தின் ரமணா படத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டேஇதுபோன்ற இ-மெயிலை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சைபர் குற்றத் தடுப்புப் போலீஸ் பிரிவின் திறமையை அறிவதற்காகவே இந்த இ-மெயிலை அனுப்பியதாகவும்பிரேம்குமார் கூறியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.