சென்னை: மாநகராட்சி கூட்டத்தில் அமளி
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று திமுக கவுன்சிலர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். துணை மேயர் கராத்தேதியாகராஜனையும் தாக்க அவர்கள் முயன்றனர்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று காலை துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது. அப்போதுசென்னை நகரில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் குறித்து உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர்.
அப்போது திமுக கவுன்சிலர்கள் எழுந்து வேறு பிரச்சினை குறித்து பேசத் தொடங்கினர். அவர்களை அமருமாறு கராத்தேதியாகராஜன் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை திமுகவினர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினர்.
இந்தக் கட்டத்தில் கராத்தே தியாகராஜன் குறித்து சில திமுக கவுன்சிலர்கள் ஆபாசமாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் அதிமுககவுன்சிலர்கள் கோபமடைந்து பதிலுக்கு அவர்களும் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர்.
இதனால் சபையில் பெரும் குழப்பம், அமளி ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் கராத்தே தியாகராஜன் இருக்கையை நோக்கிபாய்ந்து வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவைக் காவலர்களை அழைத்த கராத்தே தியாகராஜன், திமுக கவுன்சிலர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து அவைக் காவலர்கள் விரைந்து வந்து திமுகவினரை வெளியேற்றினர். அதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.