ஜெயேந்திரர் விவகாரம்: மேடைகளில் பேச கோர்ட் தடை
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கு குறித்து பொதுக் கூட்டங்களில் விவாதிக்க அரசியல் கட்சிகள், அரசியல் சாரா அமைப்புகளுக்கு சென்னைஉயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராம முத்துராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்தார். ஜெயேந்திரர் கைதை ஆதரித்து தான் பந்தளடி கீழ்புரம் பகுதியில் பொதுக் கூட்டத்தில் பேச அனுமதிகோரியபோது, சட்டம் ஒழுங்கு கெடும் என்று கூறி டிஎஸ்பி அனுமதி மறுத்தார்.
அடிப்படை பேச்சுரிமையைப் பாதிக்கும் வகையில் இந்த தடை உள்ளது. எனவே தடையை நீக்கி நான் பொதுக் கூட்டத்தில்பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் முத்துராமலிங்கம் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், அரசியல் சட்டம் 19(1)ஏ மற்றும் 19(1)பி ஆகிய பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சிகள்மற்றும் அரசியல் சாரா அமைப்புகளின் பேச்சுரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட மதம் குறித்து பேசுவதன்மூலம் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் மனது புண்படும் என்று நினைத்தால் அவ்வாறு பேசுவதற்குத் தடை விதிக்க முடியும்.
மனுதாரர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தால் குறிப்பிட்ட மதத்தினரிடையே கொந்தளிப்பு ஏற்படலாம் என்றசந்தேகத்தில்தான் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையும் இங்கு நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
இதேபோல, ஜெயேந்திரர் கைதை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்திற்குத் தடை விதித்துள்ள காவல்துறை, கைதை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதிக்கக் கூடாது. இரண்டு விஷயங்களிலும் ஒரே மாதியான நிலைப்பாட்டை காவல்துறை கடைப்பிடிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications